Monday, December 30, 2013

குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது

டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி.,
குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்., 26ம்
தேதி நடக்கிறது.
இதுகுறித்து,
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் காலியாக உள்ள,
துணை கலெக்டர் 3, டி.எஸ்.பி., 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் -0 33,
உதவி இயக்குனர் 10 ஆகிய
பணியிடங்களுக்கு,
தகுதியானவர்களை நியமிப்பதற்கான,
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு,
ஜன., 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். முழுக்க முழுக்க ஆன்லைன்
முறையில்
மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த
ஜன., 30ம் தேதி கடைசி நாள்.
முதல்நிலை தேர்வு ஏப்., 26ம்
தேதி நடத்தப்படும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment