Tuesday, December 24, 2013

கலெக்டர் ஆபீஸுக்கு ஆம்புலன்ஸில் வந்து "டிரான்ஸ்பர்' கேட்ட ஆசிரியை!

மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரி, பெண் ஆசிரியை ஒருவர்,
ஆம்புலன்ஸில் வந்து திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தார்.
திருச்சி, கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி, 44. இவர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே அண்டனூர் பஞ்.,
யூனியன் நடுநிலைப்பள்ளியில் கணித
ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் ஹென்றிதாஸ்,
திருநெல்வேலி ரயில் மெயில் சர்வீஸில்
சூப்பர்வைஸராக பணியாற்றி வருகிறார்.
சகாயமேரி நாள்தோறும்
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம்
செங்கிப்பட்டிக்கு பஸ்சில் சென்று,
அங்கிருந்து, டூவீலர் மூலம் பள்ளிக்குச்
சென்று வருகிறார்.
இந்நிலையில், நவம்பர், 21ம் தேதி இவரும்
ஆங்கில ஆசிரியை சசிகலாவும் டூவீலரில்
பள்ளிக்குச் சென்றனர். காட்டு நாவல்
காலனி அருகே செல்லும்போது, மற்றொரு பைக்
மோதியதில் இருவரும் காயமடைந்தனர். இதில்,
சகாயமேரிக்கு காலில்
எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்குள்ள
அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று,
திருச்சி தென்னூர் கே.எம்.சி.,
மருத்துவமனையில்
அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பூரண
குணமடையாததால் விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில், தனக்கு கருமண்டபம்
பகுதியில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் கோரி,
திருச்சி கலெக்டர்
ஜெயஸ்ரீயை சந்தித்து மனு அளிக்க,
சகாயமேரி ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை,
திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தார். மக்கள்
குறைதீர் கூட்டத்துக்கு வந்தவர்கள்,
ஆம்புலன்ஸில் மனு அளிக்க வந்த
ஆசிரியை சகாயமேரியை ஆச்சர்யத்துடன்
பார்த்தனர்.
இதுகுறித்து சகாயமேரி கூறியதாவது:
என் கணவர் பணி நிமித்தமாக
திருநெல்வேலியில் உள்ளார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதுவரை மாவட்ட,
ஒன்றிய அளவிலான கவுன்சிலிங்
நடக்கவில்லை. என் வயதான பெற்றோர், என்
பராமரிப்பில் உள்ளனர்.
பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்களையும்
கவனிக்க வேண்டும். காலில்
எலும்பு முறிவு ஏற்பட்டதால், வெகு தூரம்
பயணம் செய்யக்கூடாது என டாக்டர்கள்
கூறியுள்ளனர். எனவே,
கருணை அடிப்படையில் கருமண்டபம்
பகுதியில் உள்ள ஏதேனும்
ஒரு பள்ளிக்கு எனக்கு இடமாறுதல்
வழங்கக்கோரி மனு அளிக்க வந்தேன், என்றார்.

No comments:

Post a Comment