Wednesday, January 29, 2014

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தை மாற்றக் கூடாது

நிகழாண்டு 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும் என
அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து,

ஏற்கெனவே உள்ளபடி காலை 10 மணிக்கு என
தேர்வு நேரத்தை மாற்றி அறிவிக்க வேண்டும்
என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதர தீர்மானங்கள்: வரும் கல்வி ஆண்டு முதல்
10-ம் வகுப்பில் முப்பருவ
பாடமுறை அமல்படுத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முப்பருவ
சி.சி.இ முறையில் ஏற்படும்
சிக்கலை கருத்தில்
கொண்டு தற்போது நடைமுறையில் இருக்கும்
பொதுத் தேர்வு முறையை தொடர வேண்டும்.
அனைத்து நோய்களுக்கும் மருத்துவக்
காப்பீடு வழங்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தை ரத்துசெய்து பழைய
திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு உதவி பெறும் தனியார்
பள்ளி ஆசிரியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட
அரசு அறிவிக்கும் பயன்கள்
காலதாமதமின்றி வழங்க வேண்டும். 2004-ம்
ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியேற்ற
நாள் முதல் பணி வரன்முறை செய்ய
வேண்டும்.
கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் எஸ்.
துரைராஜ் தலைமை வகித்தார். மாநில
அமைப்புச் செயலர் எஸ். கமலப்பன், மாவட்டச்
செயலர் எஸ். அன்பரசு, மாவட்ட பொருளாளர் ஆர்.
முத்துவேல், அமைப்புச் செயலாளர் கருணா.
காளிதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment