Thursday, March 20, 2014

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக
தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர்
பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித்
தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46
ஆயிரம் பேருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு மார்ச் 12-ஆம்
தேதி தொடங்கியது. சென்னை,
மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம்
ஆகிய 5 இடங்களில் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்
தாளில் கூடுதலாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு இப்போது நடைபெற்று
வருகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர்
வீதம் 5 மையங்களில்
நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்க
அழைக்கப்படுகின்றனர்.
இதுவரை சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1
சதவீதத்துக்கும் குறைவானவர்கள்
மட்டுமே பங்கேற்கவில்லை என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத
வகையில் மாநிலம் முழுவதும் 5
மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டு சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. கடந்த
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90
மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29
ஆயிரம் பேருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு ஏற்கெனவே
நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில்
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக
அரசு 5 சதவீத மதிப்பெண்
சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து,
ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம்
பேர் கூடுதலாக
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள
16 ஆயிரம் ஆசிரியர்
பணியிடங்களை அனைவரும்
அறிந்துகொள்ளும் வகையில்
பாடப்பிரிவு, இடஒதுக்கீடு,
தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக
வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம்
முடிவு செய்துள்ளது. ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்திய தகுதித்
தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள் என சுமார் 72
ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தகுதித்தேர்வு மூலம் 2 ஆயிரம்
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும்,
14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும்
நிரப்பப்பட உள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-
வது தாளில் மட்டும் 43 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றிருப்பது
தெரியவந்துள்ளது. ஆனால், நிரப்பப்பட
உள்ள காலியிடங்களோ 14 ஆயிரம்
மட்டும்தான். 43 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள்
எந்தெந்தப் பாடப்பிரிவுகளைச்
சேர்ந்தவர்கள் என்பதும்
இடஒதுக்கீடு நிலை குறித்த விவரமும்
இன்னும் தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் 43 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு சில
பாடங்களில் அதிகம் பேர் இருந்தால்
அங்கு குறிப்பிட்ட
எண்ணிக்கையிலேயே வேலை
கிடைக்கும். அதேநேரத்தில், ஒருசில
பாடங்களில் காலியிடங்கள் அதிகமாக
இருந்து, தேவையான எண்ணிக்கையில்
ஆசிரியர்கள்
வெற்றி பெற்றிருக்காவிட்டால்
அங்கு காலியிடங்கள் ஏற்படவும்
வாய்ப்பு இருக்கிறது. பட்டியல்
வெளியீடு இந்நிலையில்,
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள
16 ஆயிரம் ஆசிரியர்
பணியிடங்களை அனை வரும்
தெரிந்துகொள்ளும் வகையில்
பாடப்பிரிவு, இடஒதுக்கீடு,
தமிழ்வழி ஒதுக்கீடு, மாற்றுத்
திறனாளிகளுக்கான ஒதுக்கீடு என
பகுதி வாரியாக
பட்டியலிட்டு வெளியிட ஆசிரியர்
தேர்வு வாரியம்
முடிவு செய்துள்ளது.
இந்தப் பட்டியல் வெளியான பிறகே,
தகுதித்தேர்வில்
வெற்றி பெற்றவர்களில் எந்தெந்த கட் ஆப்
மதிப்பெண் பெற்றவர்களுக்கு, எந்தெந்த
பாட ஆசிரியர்களுக்கு, எந்தெந்த
இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு வேலை கிடைக்கும்
என்பது உறுதியாக தெரியவரும்.

No comments:

Post a Comment