Thursday, March 20, 2014

தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

மூன்றாம் பருவத்துக்கான
தேர்வுகளை மார்ச், 21ம் தேதி துவங்கி,
29ம் தேதி முடிக்க, தொடக்கக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குனர்
வெளியிட்டுள்ள உத்தரவில்
கூறியிருப்பதாவது:
அனைத்து துவக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளிலும், ஏப்ரல், 21ம்
தேதி தமிழ், ஏப்ரல் 23ம் தேதி ஆங்கிலம்,
ஏப்ரல், 26ம் தேதி கணிதம், ஏப்ரல், 28ம்
தேதி அறிவியல், ஏப்ரல், 29ம்
தேதி சமூகவியல் ஆகிய
தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில், 1, 3, 5,
7ம் வகுப்புகளுக்கு காலை, 10
மணி முதல், மதியம், 12 மணி வரை, 2, 4, 6,
8ம் வகுப்புகளுக்கு மதியம், 2
மணி முதல், 4 மணி வரையும்
தேர்வு நடத்தப்பட வேண்டும். நான்காம்
வகுப்பு வரை எஸ்.ஏ.பி.எல்., முறையில்
மாணவர்களின்
படிநிலைக்கு ஏற்றவாறு மதிப்பீடு
செய்ய வேண்டும். தேர்வு நடைபெறும்
நாள் முழு வேலைநாளாக செயல்பட
வேண்டும். ஏப்ரல், 30ம்
தேதி பள்ளி வேலைநாளாக
செயல்பட்டு, மே, 1ம் தேதி முதல் ஜூன்,
1ம் தேதி வரை கோடை விடுமுறை
அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment