Friday, March 28, 2014

பள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும்
உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர
தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.
 ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய
வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.
ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம்
தேதி வரை கோடை விடுமுறை
விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள்
மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரன் முருகன்
தெரிவித்தார்.

No comments:

Post a Comment