Saturday, March 29, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணியில் புதிய முறை:கூடுதல் கவனம் செலுத்ததிணறும் ஆசிரியர்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக
கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேலம்
மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக
நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத்
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல
புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் அறிவியல் மற்றும்
கணிதம் உள்ளிட்ட முக்கிய
பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண்
பயன்படுத்தப்படும்.
தற்பொழுது மாணவர்கள் எழுதும்
விடைத்தாளில் பார்கோடிங்
இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய
முகப்புத் தாள் இணைக்கப்பட்டு இருந்தது.
விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த
முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில்
திருத்தும் ஆசிரியரே அதற்கான ‘டம்மி’ எண்
போட்டு திருத்த வேண் டிய நிலையில்
உள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்
ஒரு விடைத்தாளை கையில் எடுத்து ‘டம்மி’
எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த
மதிப்பெண் போடும்
வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த
கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில்
ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால்
குறிப்பிட்ட விடைத்தாள்
யாருடையது என்று கண்டுபிடிப்பதில்
மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள
ஒரு சில ஆசிரியர்கள் மத்தியில் திணறல்
காணப்பட்டது. ஆசிரியர்கள் கூடுதல்
கவனத்துடன் விடைத்தாள் திருத்தும்
பணியில் ஈடுபட்டுள்ளதாக
கல்வி அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment