Wednesday, March 05, 2014

ஏப்ரல் 7.ல் மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம்
தேதி தொடங்கி 9 கட்டங்களாக
நடைபெறும் என டெல்லியில்
செய்தியாளர்கள் சந்திப்பில்
தலைமைத் தேர்தல் ஆணையர்
வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக
அமலுக்கு வருவதாகவும் அவர்
தெரிவித்தார்.
9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட
தேர்தல் நடைபெறுகிறது. பின்னர்
ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய
தேதிகளிலும். மே மாதத்தில் 7
மற்றும் 12 ஆகிய தேதிகளிலும்
அடுத்தடுத்த கட்ட தேர்தல்
நடைபெறுகிறது. மே 12.ல்
கடைசி கட்ட தேர்தல்
நடைபெறுகிறது. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும்
முதல் கட்ட தேர்தலில் 2
மாநிலங்களில் 6 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும்
இரண்டாம் கட்ட தேர்தலில் 5
மாநிலங்களில் 7 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும்
மூன்றாம் கட்ட தேர்தலில் 14
மாநிலங்களில் 92 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும்
நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம்
3 மாநிலங்களில் 5 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும்
ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன்
பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில்
உள்ள 122 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும்
ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம்
உள்பட 12 மாநிலங்களில் 117
தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும்
ஏழாம் கட்ட தேர்தலில் 9
மாநிலங்களில் 89 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 7-ஆம் தேதி நடைபெறும்
எட்டாவது கட்ட தேர்தலில் 7
மாநிலங்களில் 64 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-
வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில்
3 மாநிலங்களில் 41 தொகுதிகளில்
வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 24
வாக்குப்பதிவு:
9 கட்டங்களாக நடைபெறும்
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில்
ஏப்ரல் 24-ஆம் தேதி 6-வது கட்ட
தேர்தலின் போது வாக்குப்பதிவு
நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்:
முன்னதாக, வாக்காளர் பட்டியலில்
திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம்
தேதி நாடு முழுவதும்
சிறப்பு முகாம் நடைபெறும்,
அன்று புதிய வாக்காளர்கள் தங்கள்
பெயரை வாக்காளர் பட்டியலில்
சேர்த்துக் கொள்ளலாம் என்றும்
வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தலில் பதிவான
வாக்குகள்
எண்ணிக்கை நாடு முழுவதும்
மே 16-ஆம் தேதி நடைபெறும் என
தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்
அறிவித்தார்.
தேர்தல் ஆணையர் முக்கிய
அறிவிப்புகள்:
*வரும் மக்களவை தேர்தலில்,
நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000
வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்
இது கடந்த ஆண்டை விட 12%
அதிகமாகும்.
*வாக்குச்சாவடிகளுக்கு அருகில்
குடிதண்ணீர்,
மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள
பாதை போன்ற அடிப்படை வசதிகள்
அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
*தேர்தலில்,
வேட்பாளர்களை நிராகரிக்கும்
'நோட்டா' வசதி வரும் மக்களவைத்
தேர்தலில் அமல் படுத்தப்படும்.
*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க
புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் சீட்டு முதல் முறையாக
வழங்கப்படும்.

No comments:

Post a Comment