Wednesday, March 05, 2014

9 கட்டமாக லோக்சபா தேர்தல்; தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
16வது லோக்சபா:
நடப்பு 15வது லோக்சபாவின் ஆட்சி காலம் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மே 31ம் தேதிக்குள் 16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 16வது லோக்சபாவிற்காக நாடு ழுமுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி விபரத்தை இன்று தலைமை தேர்தல் கமிஷ்னர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது : லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது; ஆந்திர சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியுடனும், ஒடிசா சட்டசபையில் பதவி காலம் ஜூன் 7ம் தேதியுடனும், சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 31ம் தேதியும் முடிவடைய உள்ளது; இதனால் மே 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது; நடத்தை விதிகள் உடனே அமல்:
பள்ளி பொதுத் தேர்வு, அறுவடை காலம், வானிலை ஆகியவற்றை கருத்திக் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது; முதல் முறையாக 18 மற்றும் 19 வயது நிரம்பிய 2.4 கோடி புதிய வாக்காளர்கள் 16வது லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்மது; நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன; 2009ம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி பேர் புதிதாக ஓட்டளிக்க உள்ளனர்; முதல் முறையாக நோட்டோ முறை லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது; வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இல்லை என்ற குழப்பங்கள் ஏற்பாடமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 9 லட்சத்து 30 ஆயரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது; கடந்த தேர்தலை விட 12 சதவீதம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது; தலைமை செயலர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுச்சாவடிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்கள் வந்து செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன; தேர்தல் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஓட்டுச்சீட்டுக்கள் வழங்கப்படும்; ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிக்க மீடியாக்கள், பாதுகாப்பு படைகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவைகள் மூலம் கண்காணிக்கப்படும்; வேட்பாளர்களின் செலவு கணக்கும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது;
தேர்தல் தேதிகள் :
ஏப்ரல் 7 ல் முதல் தேர்தல்கள் நடைபெற துவங்கும்; மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது; முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி 2 மாநிலங்களிலும், ஏப்ரல் 9ம் தேதி 5 மாநிலங்களிலும் நடைபெறும்; 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி 14 மாநிலங்களில் நடைபெற உள்ளது; 4ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி 3 மாநிலங்களிலும்; 5ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி 13 மாநிலங்களில் நடைபெற உள்ளது; 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி 12 மாநிலங்களில் நடைபெற உள்ளது; 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி 9 மாநிலங்களில் நடைபெறும்; கடைசி மற்றும் 9வது கட்ட தேர்தல் மே 7ம் தேதி 7 மாநிலங்களில் நடைபெறும்; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும்; தமிழகத்தில் 6வது கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment