Wednesday, March 05, 2014

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24 ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 24-ம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .
அன்றைய தினம் பதிவாகும் வாக்குகளும் மே 16 ஆம் தேதியே எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகியதால் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல்  நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment