Wednesday, March 05, 2014

ஓட்டளிக்க விருப்பமில்லையா? வாக்காளர்க்கு முதல்முறையாக தனி வாய்ப்பு  வழங்குகிறது தேர்தல் ஆணையம்

முதல் முறையாக யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை எனத் தெரிவிப்போர்க்கு என தனி வாய்ப்பினை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஓட்டளிக்கும் இயந்திரத்திலேயே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுமெனத் தெரிகிறது.
வேட்பாளர்களை நிராகரிக்கும் நோட்டா முறை முதன் முறையாக மக்களவைத் தேர்தலில் அறிமுகம் செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் வி.சி. சம்பத் அறிவித்துள்ளார்.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரையும் தேர்வு செய்ய விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக, நோட்டா என்ற முறையை வரும் மக்களவைத் தேர்தலில் அறிமுகம் செய்ய விருப்பதாக சம்பத் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment