10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு நாள் பயிற்சி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் 02.5.14 அன்று கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் அனைத்து மாவட்டத்தை சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment