Friday, April 25, 2014

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை)
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8
சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தத் தகவலை, தமிழக தேர்தல்
அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான
முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில
இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள்
நடந்தன.
தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக
80.99 வாக்குகள் பதிவானது.
குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86%
வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் என்பது,
கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு,
தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில்
பதிவான அதிகபட்ச வாக்குகள் ஆகும்
என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment