Wednesday, April 02, 2014

மே 9-ல் பிளஸ் 2, மே 23-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

மே 9-ம் தேதி பிளஸ் 2தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம்
தேதியிலும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்
2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம்
தேதி தொடங்கி மார்ச் 25-ம்
தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 2
தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8.45
லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
பள்ளியில் படிக்கும் மாணவ -
மாணவிகளின்
எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய
முக்கிய தேர்வாக பிளஸ் 2
பொதுத்தேர்வு கருதப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 2
தேர்வு முடிவுகள் மே 9-ம்
தேதி வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம்
தேதி தொடங்கியது ஏப்ரல் 9-ம்
தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம்
வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களைச்
சேர்த்து ஏறத்தாழ 11 லட்சம் பேர்
எழுதுகின்றனர். இத்தேர்வின்
முடிவு மே 23-ம்
தேதி வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment