Wednesday, April 02, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ல் வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தேர்வுத்துறை இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு வெளியிடப்படும் இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ள

No comments:

Post a Comment