Tuesday, May 06, 2014

திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 1ல் 94% தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 1 தேர்வு எழுதிய 94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்
செல்வக்குமார் வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பில்
கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டத்தில் 2013-14ம்
கல்வியாண்டில் 219 பள்ளிகளை சேர்ந்த 15
ஆயிரம் மாணவர்கள், 18 ஆயிரத்து 961
மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 961
பேர் ப்ளஸ் 1 தேர்வு எழுதினர். ப்ளஸ் 1
தேர்வு முடிவுகள்
நேற்று வெளியிடப்பட்டன. இதில் 14
ஆயிரத்து, 682 மாணவர்களும், 17
ஆயிரத்து, 155 மாணவிகளும் என
மொத்தம் 31 ஆயிரத்து, 837 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94 சதவீத
தேர்ச்சியாகும். தேர்வில்
தேர்ச்சி பெறாதவர்களுக்கு இந்த மாதம்
கடைசி வாரத்தில் சிறப்பு தேர்வும்
அந்தந்த பள்ளிகளில் நடைபெறும்.
இது குறித்து தகவல்களை அந்த
பள்ளி தலைமை ஆசிரியரிடம்
தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த
செய்திகுறிப்பில் செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment