Tuesday, May 06, 2014

மதுரையில் சி.இ.ஒ .,க்கள் கூட்டம்

மதுரையில் மாணவர்களுக்கான
வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2
அரசு தேர்வுகள் முடிவிற்கு பின்,
மாணவர்களின் சான்றிதழ்கள், 'ஆன்லைன்'
மூலம் வேலைவாய்ப்பக
பதிவு மேற்கொள்வது குறித்து இணை இயக்குனர்
முருகேசன் விளக்கினார். குறிப்பாக,
'கடந்தாண்டு பத்தாம்
வகுப்பு பதிவுகளை தயார் நிலையில்
வைத்துக் கொள்ள வேண்டும், பிளஸ் 2
மாணவர் பதிவுக்கு வரும்
போது ரேஷன் கார்டுகள் கண்டிப்பாக
கொண்டுவர
முன்கூட்டியே அறிவுறுத்த வேண்டும்,'
என தெரிவித்தார்.
முதன்மை கல்வி அலுவலர்கள்
அமுதவல்லி (மதுரை), வாசு (தேனி),
சுகுமார் தேவதாஸ் (திண்டுக்கல்),
சிவகாமிசுந்தரி (ராமநாதபுரம்),
செந்தில்வேல் முருகன் (சிவகங்கை),
ஜெயக்குமார் (விருதுநகர்),
ஜெயகண்ணு (நெல்லை) மற்றும்
கணினிப் பிரிவு ஊழியர்கள்
பங்கேற்றனர்.

No comments:

Post a Comment