Saturday, May 03, 2014

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பம்

பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும்,
10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.

இதற்கு “லேட்ரல் என்ட்ரி”
என்று பெயர். 2014-15-ம்
கல்வி ஆண்டில் லேட்ரல் முறையில்
பாலிடெக்னிக்கில் சேருவதற்கான
விண்ணப்பப் படிவம் மே 5-ம்
தேதி முதல் 23-ம் தேதி வழங்கப்பட
உள்ளது.
அனைத்து அரசு பாலிடெக்னிக்
கல்லூரிகளிலும் விண்ணப்பம்
கிடைக்கும். விண்ணப்ப படிவத்தின்
விலை ரூ.150. எஸ்சி,
எஸ்டி மாணவர்களுக்கு இலவசம்.
இதற்கு சான்றொப்பம் பெறப்பட்ட
சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க
வேண்டும். பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை மே 23-ம்
தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், சென்னை தரமணியில்
உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக்கில்
செயற்கை உடல் உறுப்புகள்
தயாரிப்பு தொடர்பான
டிப்ளமா படிப்பில் முதல் ஆண்டில்
சேர பிளஸ்-2 மாணவர்களும்,
தரமணி டாக்டர் தர்மாம்பாள்
அரசு பாலிடெக்னிக்கில்
அழகு சாதனம்-அலங்காரம்
(காஸ்மெட்டாலஜி)
டிப்ளமோ படிப்பில் முதல்
ஆண்டு சேர மாணவிகளும்
விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட
தகவலை அரசு தொழில்நுட்பக்
கல்வி ஆணையர் குமார் ஜெயந்த்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment