Saturday, May 03, 2014

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான
மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை)
வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள்
இயக்குநர் கு.தேவராஜன்
வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன்
படிப்பு உதவித்தொகை திட்ட
(NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில்
நடத்தப்பட்டது.
இத்தேர்வு முடிவு மே 5-ம்
தேதி (திங்கள்கிழமை) காலை 10.30
மணிக்கு வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்
துறை இணையதளம் www.tndge.in
மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு தேவராஜன்
கூறியுள்ளார்.
8-ம் வகுப்பு மாணவர்களுக்காக
நடத்தப்படும் இந்த
சிறப்பு திறனாய்வுத்
தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம்
மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த
தேர்வில் வெற்றிபெறும் 6,695
பேருக்கு பிளஸ் 2
வரை கல்வி உதவித்தொகையாக
மாதம் ரூ.500 வழங்கப்படும்
என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment