Wednesday, May 14, 2014

ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம்பேர் தோல்வி

பிளஸ் 2 தேர்வில்,ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்கள்
தோல்வி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
77 ஆயிரம் பேர்,
தோல்வி அடைந்தனர். இந்நிலையில்,
ஒரு பாடத்தில் மட்டும், 20,018 மாணவர்கள்,
தோல்வி அடைந்திருப்பது தெரிய
வந்துள்ளது.இரு பாடங்களில், 24,095;
மூன்று பாடங்களில், 17, 338;
நான்கு பாடங்களில், 9,293;
ஐந்து பாடங்களில், 4,200;
ஆறு பாடங்களில், 6,466 பேர் என, மொத்தம்,
81,410 பேர்,
தோல்வி அடைந்துள்ளனர்.ஆறு பாடத்தில்
தோல்வி அடைந்ததாக கருதப்படும், 6,466
பேரில், 4,000த்திற்கும் மேற்பட்டோர்,
தேர்வில், 'ஆப்சென்ட்' ஆகி உள்ளனர்.
அனைத்துப் பாடங்களிலும், 'ஆப்சென்ட்'
ஆன மாணவர் எண்ணிக்கை,
தேர்ச்சி புள்ளி விவர கணக்கில்
வராது.எனவே, 'ஆப்சென்ட்'
எண்ணிக்கை போக,
தேர்வு எழுதியவர்களில், 77 ஆயிரம் பேர்
தோல்வி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment