Saturday, May 31, 2014

பொறியியல் கவுன்சலிங் ஜூன் 23-ல் தொடக்கம்: ஜூன் 16-ல் ரேங்க் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.

கல்லூரியை தேர்வு செய்வதற்கான
கவுன்சலிங் 23-ம் தேதி தொடங்கும்
என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல்
கல்லூரிகள், அரசு மற்றும்
அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும்
தனியார் கல்லூரிகளில்
(அரசு ஒதுக்கீடு) பி.இ., பி.டெக்.
படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள்
உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில்
பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர
ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ-மாணவிகள்
விண்ணப்பித்துள்ளனர். இந்த
நிலையில், பொறியியல் படிப்புக்கான
ரேங்க் பட்டியல்,
கலந்தாய்வு அட்டவணை விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல்
மாணவர் சேர்க்கை செயலாளர்
பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
ஜூன் 11-ல் ரேண்டம் எண்
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு ஜூன் 11-ம்
தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும்.
அதைத்தொடர்ந்து, ரேங்க் பட்டியல் ஜூன்
16-ல் வெளியிடப்படும்.
இதற்கிடையே,
விளையாட்டு வீரர்களுக்கு அசல்
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13-ம்
தேதி தொடங்கி 16-ல் முடிவடையும்.
அவர்களுக்கு ரேங்க் பட்டியல் ஜூன் 17-ம்
தேதி வெளியாகும். கவுன்சலிங் 23, 24-
ம் தேதிகளில் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 25-ல்
கவுன்சலிங் நடக்கும்.
பொது கவுன்சலிங் எப்போது?
பொது கவுன்சலிங் ஜூன் 27-ல்
தொடங்கி ஜூலை 28-ம்
தேதி முடிவடையும். இதேபோல்,
தொழிற்கல்வி மாணவர்களுக்கான
கவுன்சலிங் ஜூலை 9-ம்
தேதி தொடங்கி 20-ல் நிறைவடையும்.
இவ்வாறு ரைமன்ட் உத்தரியராஜ்
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment