Friday, May 09, 2014

முதலிடத்தை தவறவிட்டது விருதுநகர்

கடந்த 28 ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில், விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை பெற்று, கோலோச்சி வந்தது. இந்த ஆண்டு, அது அப்பெருமையை தவறவிட்டுவிட்டது.
பிளஸ்2 தேர்வில், 96.12 சதவீத தேர்ச்சி பெற்று, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 95.87 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றிருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், முதலிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment