Friday, May 09, 2014

மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த 2012ல் 86.7 சதவீதமாக இருந்தது.
இந்த விகிதம், 2013ல் 88.1 சதவீதமாக உயர்ந்தது. ( தற்போது ) 2014ல் 90.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது போல் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. 2012ல் 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 பேர், 2013ல் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 பேர், 2014ல் 7 லட்சத்து 44 ஆயிரத்து 698 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வாகி வெளியேறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதையே இது காட்டுகிறது.

No comments:

Post a Comment