கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கான (கவுன்சிலிங்) விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமையோடு (மே 30) நிறைவுபெறுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 2 ஆம் தேதி கடைசி நாள். கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
கலந்தாய்வு செப்டம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூலை மாதம் வெளியிடப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 14 மையங்களில் மே 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதுவரை 19 ஆயிரத்து 56 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக மட்டும் 14 ஆயிரத்து 738 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன
No comments:
Post a Comment