Wednesday, July 30, 2014

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக
887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட
உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டன. இதன் காரணமாக,
இப்போது இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களில் குறைவான காலிப்
பணியிடங்களே உள்ளன.
கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வு முதல் தாளில் 30
ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள
நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த
ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்
தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42
ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண்
அடிப்படையில் இந்த ஆண்டு சுமார்
11ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட
உள்ளனர்.

No comments:

Post a Comment