Wednesday, October 01, 2014

பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?

உள்ளூரில்
காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
தமிழகத்தில்
டி.இ.டி.,தேர்வு மூலம் தேர்வான
இடைநிலை பட்டதாரிகளான 14,700
ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடந்த
வாரம் வழங்கப்பட்டு, உடனே பணியில்
சேரும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இவர்களில், 50 சதவீதம் பேர் சொந்த
மாவட்டத்தில் பணி வாய்ப்பில்லாததால்,
வெளி மாவட்டத்திலுள்ள
காலியிடங்களை தேர்வு செய்தனர்.
நியமன ஆணை பெற்ற 25 சதவீத
ஆசிரியர்கள் பணியில் சேராமல்
தாமதித்து வருகின்றனர். அரசியல்,
அதிகாரிகள் சிபாரிசில், நியமன
உத்தரவை மாற்றி, சாதகமான
இடங்களை பெற காத்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் மாற்றத்தால் சாதக
இடங்களுக்கான உத்தரவை பெறுவதில்
புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல்
உருவாகியுள்ளது. இவர்களுக்கான
சிறப்பு பயிற்சியில் 25 முதல் 30 சதவீதம்
பேர் வரவில்லை என பயிற்சியாளர்கள்
கூறுகின்றனர்.கல்வித்துறை வட்டாரம்
கூறுகையில், “கலந்தாய்வு மூலம்
நியமன ஆணை பெற்றவர்கள் பணியில்
சேர்ந்ததற்கான ஆய்வு நடக்கிறது.
தேர்வு செய்த பள்ளியில் பணியில்
சேர்ந்தால்,
உடனே வேறு பள்ளிகளுக்கு மாற
முடியாது என்பதால், சிலர்
தாமதித்து வருகின்றனர். குறிப்பிட்ட
நாள் வரை பணியில்
சேராதவர்களுக்கு சிக்கல் ஏற்பட
வாய்ப்புள்ளது,” என்றனர்.

No comments:

Post a Comment