Friday, October 31, 2014

பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு,
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்
மட்டுமே நடக்கும்;
விண்ணப்பம்
அனுப்பக்கூடாது என, ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பு
அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்
காலி பணியிடங்களை நிரப்பும் பணி,
வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில்
நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால்
பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர்
பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர்.
இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம்
எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள்,
டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப
வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி.,
தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment