Thursday, February 05, 2015

பிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான
செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. மார்ச் 5ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வுகள்
தொடங்குகிறது.
அறிவியல் பாடப்
பிரிவை எடுத்து படிக்கும்
மாணவர்களுக்கு வேதியியல்,
இயற்பியல், விலங்கியல், தாவரவியல்
உள்ளிட்ட பாடங்களில்
செய்முறை தேர்வு இன்று
தொடங்குகிறது. இந்த தேர்வில் தமிழகம்
முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ,
மாணவியர் பங்கேற்பார்கள்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள
மாணவர்களுக்கு பிப்ரவரி 5ம்
தேதி (இன்று) முதல் 24ம்
தேதி வரை செய்முறை தேர்வுகளை
நடத்தி முடிக்க வேண்டும்
என்று தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
தனித் தேர்வர்களுக்கு 25, 26, 27 ஆகிய
தேதிகளில்
செய்முறை தேர்வு நடக்கும்.
காலை 9.30 மணிக்கு ஒரு பிரிவும்,
பிற்பகலில் ஒரு பிரிவு என
இரண்டு பிரிவுகளில்
செய்முறை தேர்வு நடக்கும். அந்தந்த
மாவட்ட டிஇஓ, சிஇஓ
கண்காணிப்பு பள்ளிகளுக்கு நேரில்
வந்து பார்வையிடுவார்கள்.
மாவட்டங்களை கண்காணிக்க
இணை இயக்குநர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment