Wednesday, May 20, 2015

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 நபர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு பணி மாறுதல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 500 நபர்களை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இவ்வாண்டு பணிமாறுதல் செய்யப்பட உள்ளனர்.
அதன் முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி)  கேட்டுள்ளார். அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

அவ்வாறு சேகரித்து அனுப்பப்படும் விவரங்களை கொண்டு மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் 700 நபர்களை தேர்ந்தெடுத்து விருப்பத்தின் அடிப்படையில் முதல் 500 நபர்கள் தேர்ந்தெடுத்து பள்ளிக்கு பணிமாறுதல் செய்யப்படுவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment