Wednesday, May 06, 2015

SSA திட்ட இயக்குநர் அவர்களுடன் இன்று(6.5.15) தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்பத் சந்திப்பு

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி அவர்களை இன்று(6.5.15) காலை தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.கே.சம்பத் உள்ளிட்ட மாநில/மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தார்.
ஆசிரியர் பயிற்றுனர்களின்  கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இயக்குநரிடம் மாநிலத்தலைவர் வலியுறுத்தினார்.
இன்றைய சந்திப்பின் பொது மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் கூறிய கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் ஒரு பார்வை!
1. முதல் கட்டமாக 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் மாற்றப்படுவார்கள், அதற்கான அரசாணை கூடிய விரைவில் வெளியிடப்படும்.
2.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நிரந்தர பயணப்படி ரூபாய் 800 -1000 உயர்த்தப்படும்.
3.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது கலந்தாய்வில் மனமொத்த மாறுதல் வழங்கப்படும்.
4.அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு புதிதாக 900 ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
5.புதிய நியமனத்திற்கு முன்னர்,  தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
மேலும், சந்திப்பின்போது நடைபெற்ற கலந்துரையாடல் அறிய விழுப்புரத்தில் நடைபெறும் மாநில செயற்குழுவில் தவறாது கலந்துகொள்ள அனைத்து மாவட்டத்தின் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment