Friday, May 09, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு; மாணவி சுஷாந்தி முதலிடம்; 2ம் இடமும் மாணவிக்கே ! 3 வது இடம் 2 பேருக்கு

பிளஸ் 2 தேர்வில் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சுஷாந்தி 1193 மார்க்குகள் பெற்று (ஸ்ரீவித்தியா மந்திர்மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தை பிடித்துள்ளார்.
2வது இடத்தை தர்மபுரியை சேர்ந்த அலமேலு ( ஸ்ரீவிஜயா வி.டி.எம்., மேல் நிலைப்பள்ளி ) 1192 மார்க்குகள் பிடித்துள்ளார். 1191 மார்க்குகள் பெற்று 3 வது இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். 3 வது இடம் பெற்றவர்கள் விவரம்; துளசிராஜன் ( கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி ) புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம். நித்தியா ( பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் சென்னை).

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்ட்டன. இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 90. 6 சதவீதம் ஆகும். மாணவர்கள் 87.4 சதவீதம் ஆகும். மாணவிகள் 93.4 சதவீதம் ஆகும். கணிதத்தில் 3 ஆயிரத்து 882 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர். மேலும் 200க்கு 200 மார்க்குகள் பெற்றவர்கள் விவரம்: வணிகவியல் : 2 ஆயிரத்து 581 மாணவ, மாணவிகள் . இயற்பியல் ; 2 ஆயிரத்து 710 , வேதியியல்: ஆயிரத்து 693 உயிரியியல் 652 பேர். பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment